மனிதன் தனது கண்டுபிடிப்புகளில் முக்கியமான இரண்டு விஷயங்களில் அடிமைப் பட்டு கிடக்கிறான். தான் அடிமைப் பட்டு இருப்பதே அவன் அறிவதில்லை. அவை கடவுளும் காசும். மற்ற உயிரினங்கள் இவை இரண்டையும் அறியா. அதனாலேயே அவை இயற்கையோடு இணைந்து மகிழ்ச்சியாயும் அமைதியாயும் தமது வாழ்வை வாழ்கின்றன. மனிதனோ இவை இரண்டில் ஒன்றை தேடுவதிலேயே தன் வாழ்வைத் தொலைத்து விடுகிறான். அதற்காக அவன் கொலையும் செய்யத் தயங்குவது இல்லை. இவை இரண்டும் இல்லாத வாழ்வை என்றேனும் நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment